ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. புதியதாக ஓமைக்ரான் வேரியண்ட் பாதிப்பும் ஒரு பக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான புதிய வழிமுறையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் உடனடியாக ரேபிட் டெஸ்ட் மேற்கொள்ளவேண்டும். அப்போது முடிவு நெகட்டிவ் என்று வந்தால், ஏழு நாட்கள் அவரை அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். அதை தொடர்ந்து ஆறாவது நாளில் மீண்டும் ரேபிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவேளை தொடர்பில் இருந்த நபருக்கு அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை சவுத் வேல்ஸ், விக்டோரியா, க்யூன்ஸ்லேண்டு, சவுத் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா கேபிட்டல் டெரிட்டரி ஆகிய மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கார்ட் மாரீசன், அதிகரித்து வரும் ஓமைக்ரான் வேரியண்ட் பாதிப்புக்களை எதிர்த்து போராடுவதற்கு இந்த வரையறை அவசியம். இந்த பெருந்தொற்றை ஒழிக்க இதுவே சிறந்த வழி என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
Link Source: https://bit.ly/3HrWis3