கடந்த மாதம் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரீசன், அந்நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள போர்ட் கெம்பலா, நியூகாஸ்ட்ல் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் ஒன்று நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்கப்படுவதற்கு தேர்வு செய்யப்படும் என அறிவித்தார். பலரும் வழிமொழிந்த போர்ட் கம்பலா நகரத்தில் இந்த கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் கான்பெராவுக்கு செய்துகொடுத்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் எழுந்துள்ள்ன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள். போர்ட் கம்பெலா ஒரு அமைதியை விரும்பும் நகரம். அரசு திட்டமிடுவதை போன்று இங்கு நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்கப்பட்டால், விபத்துகள் ஏற்படக்கூடும், கடல் உயிரின வாழ்வியல் பாதிக்கப்பட்டு, சூழலியல் சீர்கேடாகும் என்று தெரிவிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் அணுசக்தி குறைபாடு தொடர்ந்து உள்ளது. ஆஸ்திரேலியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை மற்றும் கதிரியக்கப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரப் பயன்பாடும் கிடையாது. இந்நாட்டில் ஒரேயொரு அணு உளை உள்ளது. அதுவும், ராணுவம் அல்லாத ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.