உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த இடம் பாக்மேக். இங்கு ரஷ்யா டாங்கிகள் ஊருக்குள் முன்னேறிச் சென்றுக் கொண்டிருந்தன. இதை பார்த்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், சாலையில் செல்லும் டாங்கிகளை தடுத்து நிறுத்த முயன்றார்.
ஆனால் டாங்கிகள் அவரை கடந்து செல்ல முயன்றன. உடனடியாக தன்னுடைய கைகள பின்னந்தலையில் கட்டி, டாங்கிகள் முன்பு மண்டியிட்டு சாலையில் அமர்ந்துவிட்டார். அவரை அணுகிய ரஷ்ய வீரர்கள், அந்த நபரை வழியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது சமப்வம் கடந்த 1989-ம் ஆண்டு டியான்நான்மென் சதுக்கத்தில் நடந்த சம்பவத்தை நினைவைக் கூறுவதாக பலரும் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஊருடுவலை தடுக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சீனா டாங்கிகள் முன்பு மண்டியிட்டு அமர்ந்துவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட படம் அமைதியுடன் கூடிய எதிர்ப்பின் அடையாளமாக மாறியது.
Link Source: https://ab.co/3ppZQ7M