Breaking News

Tasmania தனது எல்லையை NSW-விற்கு திறப்பு – சிட்னி புற நகரங்களுக்கு கொரோனா எச்சரிக்கை !

Glenfield கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைரஸ் துகல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், தென்மேற்கு சிட்னியில் உள்ள மக்கள் லேசான நோய் அறிகுறி கண்ட உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என NSW Health கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வைரஸ் fragments மாநிலத்தின் கழிவு நீர் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டன.சுத்திகரிப்பு நிலையத்தால் பயன்பாடு பெற்ற புறநகர்ப்பகுதிகளில் ஏற்கனவே தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அறியப்படாத தொற்றுகள் இருந்து நோய் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Airds, Ambarvale, Appin, Bardia, Blair Athol, Blairmount, Bow Bowing, Bradbury, Campbelltown, Casula, Claymore, Eagle Vale, Englorie Park, Eschol Park, Glen Alpine, Glenfield, Ingleburn, Kearns, Leumeah, Macquarie Fields, Macquarie Links, Menangle Park, Minto, Raby, Rosemeadow, Ruse, St Andrews, St Helens Park, Varroville மற்றும் Woodbine ஆகிய இடங்கள் சுத்திகரிப்பு நிலையத்தின் சேவை பெறும் புறநகர்ப்பகுதிகள் ஆகும்.

நவம்பர் 6 முதல் NSW-வை குறைந்த ஆபத்துள்ள பகுதி என வகைப்படுத்தும் திட்டத்தை Tasmania அரசு செவ்வாய் அன்று அறிவித்தது.இதனால் mainland-ல் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.எனினும் இறுதி முடிவு பொது சுகாதார ஆலோசனைக்கு உட்பட்டதாக இருக்கும் என்று Premier Peter Gutwein தெரிவித்தார்.

மேலும் NSW-வின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.செவ்வாய் அன்று mainland-ல் இரண்டு தொற்றுகளும்,ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பத்து பேரும் தொற்று கண்டறியப்பட்டது.ஆனால் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நெருங்கும் பொழுது மேலும் தொற்றுகள் மாநிலத்தில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என Mr Gutwein செய்தியாளர்களிடம் கூறினார்.

Tasmania தனது எல்லையை தெற்கு ஆஸ்திரேலியா,மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு மண்டலம், ACT மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு திங்களன்று திறந்தது.விக்டோரியா கோவிட் எண்களை எவ்வாறு கண்கானிக்கிறது என்பதை பொறுத்து விக்டோரியாவை மீண்டும் திறப்பதற்கான தற்காலிக தேதி டிசம்பர் 1 என்று கூறி உள்ளார்.

தொடர்ந்து இரண்டு நாட்களாக கோவிட் தொற்று இல்லாமல் நள்ளிரவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில் NSW எல்லையை திறப்பது குறித்து எச்சரிக்கையை தெரிவித்தார் Ms Berejiklain.செவ்வாய் அன்று உள்நாட்டில் கண்டறியப்பட்ட இரண்டு தொற்றுகளும் Oran Park Community Cluster உடன் தொடர்புடையவை என்று அறியப்பட்டு அவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.