முதல் சலுகைகள் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வருகிறது .மேலும், ஆஸ்திரேலியாவில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விசாக்கள் வழங்குவதற்காக நோய் தொற்றுகளின் போது நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை.
நவம்பர் மாதத்தில் தற்காலிகமாக சில மாற்றங்களை அமல்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்தது, எனவே பங்குதாரர்கள் மற்றும் விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் விசாக்களை வழங்க நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை. கடந்த மாதம் பெற்றோர் விசா விண்ணப்பதாரர்களுக்கும் இதேபோன்று அறிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு உள்துறை அமைச்சகத்தின் வலைதளம் விசா பயணிகளின் சலுகைகளுக்கான தேதிகள் புதுப்பிக்கப்பட்டது.கூட்டாளர் பயணிகள் மற்றும் குழந்தை விசா சலுகைகள் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது. இவை குழந்தை (துணைப்பிரிவு 101), தத்தெடுப்பு (துணைப்பிரிவு 102), சார்புடைய குழந்தை (துணைப்பிரிவு 445), வருங்கால திருமணம் (துணைப்பிரிவு 300) மற்றும் கூட்டாளர் (துணைப்பிரிவு 309) விசாக்களுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களை கொண்டுள்ளது.
இதனடிப்படையில் மார்ச் 24 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள பெற்றோர் சலுகைகள், பெற்றோர் (துணைப் பிரிவு 103), பங்களிப்பு பெற்றோர் (துணைப் பிரிவு 173) மற்றும் பங்களிப்பு பெற்றோர் (துணைப்பிரிவு 143) விசாக்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.ஆஸ்திரேலியாவை விட்டு கொரோனா வைரஸ் தொடர்பாக பயணங்களின் தடைகள் மற்றும் எல்லை மூடல்கள் வெளியேறுவதையும், உள்ளே நுழைவதையும் கடினமாக மாற்றி உள்ளதால் விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் வக்கீல்கள் இந்த மாற்றங்களுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்தனர்.மேலும் வரவிருக்கும் சலுகைகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.