Breaking News

Squeaky Beach-ல் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

26 வயது நிரம்பிய இரு இந்திய இளைஞர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்கள் பொழுதினை Wilsons Promontory -ன் Squeaky கடற்கரையில் கழித்தபோது, மிகப்பெரிய அலையினால் உள்ளிழுத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்ற சில நொடிகளுக்கு முன், Anupam Chhabra மற்றும் Ashu Duggal என்ற இரு இளைஞர்கள் கடற்கரையில் நிழற்படம் எடுத்துக்கொண்டு கடல்அலையை ரசித்துக்கொண்டிருந்தனர். சரியாக மதியம் 3.40 மணி அளவில் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிலமணி நேரத்திற்கு பின், Mr. Chabbra-வின் உடல் கண்டெடுக்கப்பட்டு, அவரை உயிர்ப்பிக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 24 மணி நேர வான்வழி மற்றும் கடல்வழி தேடுதலுக்கு பின், Mr.Duggal இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தன் சகோதரனுடன் சென்ற முதல் கடற்கரை பயணம்,அவரின் இறுதிப்பயணம் ஆனது என Mr. Duggal-ன் சகோதரி Anu வருத்தமுடன் கூறியுள்ளார். நாங்கள் இணைந்து சென்ற இறுதிப்பயணம் என்பதை தன்னால் நம்பமுடியவில்லை என Mr.Duggal -ன் நண்பரும் Anupam-ன் சகோதரருமான Aditya Chhabra சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.டிசம்பர் 25-ம் தேதி நாங்கள் அனைவரும் இணைந்து கடற்கரைக்கு சென்றோம். நாங்கள் திரும்பிவிட்டோம் ஆனால் அவர்கள் வானுலகத்திற்கு சென்றுவிட்டனர் என கூறியுள்ளார்.

விலைமதிப்பில்லா தருணங்களை மட்டுமல்லாமல் கடினமான பிரிவினையும் கொடுத்து சென்றுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அவர்களின் பிரிவு தன்னை வருத்தும் என்றும், சொர்க்கத்தில் அவர்களின் ஆத்மாக்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் தன்னுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை நேசிப்பேன் எனவும் கூறியுள்ளார். Anupam சிரித்த முகத்துடன் இருக்கும் அழகான மனிதர் என அவருடன் பணிபுரிந்த Mandi Bennett கூறியுள்ளார்.அவர் யாரைப்பற்றியும் தவறாக எதையும் கூறியதில்லை என்றும், அவரது பிரிவு தன்னை மிகவும் வருத்தும் என்றும் கூறியுள்ளார்.