கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 4 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 300 நாட்களில் 5000 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட கூடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 1000 பேருக்கு குறைவாகவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொற்றால் பாதிக்கப்பட்ட 74 வயது நபர் உயிரிழந்ததே தெற்கு ஆஸ்திரேலியாவில் பதிவான கடைசி உயிரிழப்பாகும். கடந்தாண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 361 பேருக்கும், மார்ச் 26 ஆம் தேதி ஒரே நாளில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே அதிகபட்ச தொற்று எண்ணிக்கை ஆகும். தெற்கு ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட தொற்றுகளில் சுமார் 86 பேர் ரூபி பிரின்ஸஸுடன் தொடர்புடையவர்கள் என்பதும் பார்சோ பள்ளத்தாக்கு பதியில் ஏற்பட்ட தொற்று பரவலே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி அதிகபட்சமாக 23,719 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
டிசம்பர் 2020 முதல் தெற்கு ஆஸ்திரேலியாவின் வர்த்தக பகுதிகளுக்கு செல்பவர்கள் அங்கிருக்கும் கியூஆர் கோட் மூலம் பதிவு செய்த பிறகே அனுமதி என்பது வழங்கப்பட்டது. கடந்த செம்படம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை இந்த கியூஆர் கோட் மூலம் 2.39 மில்லியன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமலானதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.
Link Source: https://ab.co/3oXK6HZ