உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கிழக்கு உக்ரைனின் நகரில் உள்ள ரயில் நிலையம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100 பேர் வரை படுகாயமடைந்து உள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து ரயில் மூலமாக வெளியேறுவதற்காக குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி இருந்த நிலையில் திட்டமிட்டே ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் Kramatorsk ரயில் நிலையத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பொதுமக்களை கொள்ளும் நோக்கில் இலக்காகக் கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் கோழைத்தனமாக ரஷ்யா இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், குறிப்பிட்ட ரயில்நிலையத்தில் உக்ரைனிய படைகள் இல்லாததை அறிந்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதற்கு ரஷ்யா நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
45 நாட்களை கடந்து உக்ரைன் மீதான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு உலக நாடுகள் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ரஷ்யா ராணுவம் தாக்குதல் மூலமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில் தளவாடங்கள் மற்றும் ராணுவ உதவிகளை பல்வேறு மேற்குலக நாடுகள் இடம் பெற்று வருகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து இதுவரை வெளியேறி உள்ள நிலையில் தொடர்ந்து அங்கிருந்து பல்வேறு வழித்தடங்களில் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
Link Source: https://ab.co/35TZmA3