Breaking News

பல நாட்களாக நடந்து வரும் போருக்கு இடையில் உக்ரனைச் சேர்ந்த 2439 ராணுவ வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Russia says 2439 Ukrainian troops have surrendered amid days of fighting.

கடந்த சனிக்கிழமை அஸோவிஸ்டால் ஆலையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு வசித்து வந்த 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்துவிட்டதையும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Russia says 2439 Ukrainian troops have surrendered amid days of fightingமேலும் ரஷ்யாவைச் சேர்ந்த பாதிகாப்பு அமைச்சர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உக்ரனைச் சேர்ந்த ராணுவ வீரர் ரஷ்யாவிடம் கீழ்படிந்து நடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2439 உக்ரைனின் ராணுவ வீரர்கள் சரணடைந்துள்ளனர் என்று அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸோவிஸ்டால் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டதை குறித்து உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அங்கு நிலவி வரும் போர் காரணமாக 450000 மேற்பட்டவர்கள் அத்தியாவச தேவைகள் இல்லாமல் தவித்து வரலாம் என்று கருதப்படுகிறது.