ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் பிடியிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்து தற்போது மெல்பனில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அகதி ஜமால், தான் தப்பித்து வந்த போது பசிபிக் தீவுகளில் ஏற்பட்ட பல்வேறு இன்னல்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
பசிபிக் தீவான Nauru-ல் தஞ்சம் அடைந்த போது அங்கு தாமாக ஏற்படுத்திக் கொண்ட தீ விபத்தில் கடுமையாக காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்நிலையில் அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இங்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜமால் பார்க் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், படகுகள் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகள் யாரும் இங்கு தங்க வைப்பதற்கான அனுமதி இல்லை என்றும், சட்டம் கடுமையாக அதை அனுமதிப்பது இல்லை என்றும் குடியமர்வு துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2013 ம் ஆண்டு தொடங்கி பசிபிக் தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிகழ்வுகள் தொடர்பாகவும் தான் அனுபவித்த இன்னல்கள் தொடர்பாகவும் ஜமால் கண்ணீர் மல்க கூறியுள்ளார். ரியலி அரசு குடியமர்வு காண அனுமதி தரவேண்டும் என்றும் தடுப்புக்காவலில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் ஜமால் தரப்பு வழக்கறிஞர் Alison Battisson கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கறிஞர் Alison Battisson , இன்னும் சில ஆண்டுகளில் தாலிபான்களின் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த 110 அகதிகளை மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆஸ்திரேலியாவில் தடுப்புக்காவலில் இருந்து ஒருவரை மீட்பது என்பது சாதாரணமானது அல்ல என்றும், நடைமுறையில் அது தாலிபான்கள் இடம் இருந்து தப்பி வருவதை விட கடினமான ஒன்றாக இருக்கும் என்றும் Alison Battisson கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அரசு அகதிகளின் கொள்கைகளில் எந்தவொரு மாற்றங்களையும் மேற்கொள்ளாது என்றும், உங்கள் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர்களுக்கான மீள்குடியமர்வுக்கு வழி இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு விவகாரங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள தயாராக இல்லை என்றும் இது தனிநபர் சார்ந்து முடிவு செய்யவேண்டிய விஷயம் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஏராளமான அகதிகள் தங்களது மறுவாழ்வுக்கான கோரிக்கைகளை சட்டபூர்வமாக தொடர்ந்து பெறுவதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Link Source: https://ab.co/3flTcdi