கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதற்கான சோதனை ஓட்டத்தை க்விண்டாஸ் நிறுவனம் துவங்கியது. குறிப்பிட்ட நகரங்களுக்கு சென்று வருவதற்கு சுமார் 19 மணிநேரங்கள் மற்றும் 16 நிமிடங்களாகின.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே தொடர்ந்து விமானங்களை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக 12 ஏர்பஸ் ஏ350-1000 எஸ் ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய க்விண்டாஸ் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டாளர் ஆலன் ஜாயிஸ், குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே நீண்ட தூரம் செல்லும் இந்த விமானப் பயணங்கள் மக்களுக்கு சலிப்படையாதவாறு இருக்கும். க்விண்டாஸ் நிறுவனம் பயணிகளை சிறப்பாக கவனித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஏ350-1000எஸ் விமானங்களில் 238 சாதாரண ரக இருக்கைகளும் 140 எக்கானமி பயணிகளுக்கான இருக்கைகளும் உள்ளன. வரும் 2025-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக லண்டன் மற்றும் நியூ யார்க்கு இந்த விமானங்கள் பறந்து செல்லவுள்ளன.