நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி ஒருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்தாக எம்.பி Andrew Laming மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். குற்றச்சாட்டு குறித்து ஊழியர்கள் பலரிடம் குயின்ஸ்லாந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
விசாரணை குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் எம்.பி Andrew Lamingக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், குற்றவியல் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன் புல், உடனடியாக லேமிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ஸ்காட் மோரிசன் , லேமிங்கை 30 நாட்கள் விடுமுறையில் இருக்க அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.