தொண்ணூற்று ஐந்து வயதான ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலம் காரணமாக இரண்டு வார காலம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் மேலும் பார்வையாளர்கள் யாரையும் அவர் சந்திக்க கூடாது என்றும், ஓய்வு நேரத்தில் எளிமையான சில பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று நவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியிலும் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்த பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 பருவநிலை மாநாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வீடியோ வாயிலாக தனது செய்தியை ராணி எலிசபெத் பதிவு செய்து மாநாட்டில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனிலுள்ள கிங்ஸ் எட்வர்ட் மருத்துவமனையில் ராணி இரண்டாம் எலிசபெத் துக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்டாயம் இரண்டு வார கால ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டு அவரை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் அடுத்த ஆண்டு தனது பிளாட்டினம் ஜுப்ளி விழாவை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Link Source: shorturl.at/adwKO