சூழலியல் ஆராய்சியாளரான டாம் பிலிஃப்ஸ் (57) பல ஆண்டுகளாக பிரேசிலில் வசித்து வருகிறார். சமீபமாக மழைகாடுகள் குறித்த ஆய்வில் அவர் ஈடுபட துவங்கினார். அதற்காக பிரேசில் நாட்டைச் சேர்ந்த அரோவ்ஜா பெராரியா என்பவரையும் இந்த ஆய்வில் அவர் இணைத்துக் கொண்டார்.
இருவரும் கடந்த 5-ம் தேதி காலை 7 மணியளவில் ஜாவேரி பள்ளத்தாக்கு என்கிற பகுதிக்கு அருகே வசித்து வரும் சாவோ ரஃபேல் சமூக மக்களை சந்தித்துள்ளனர். அதை தொடர்ந்து அட்டாலியா டோ நார்தோ என்கிற பகுதிக்கு அவர்கள் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அட்டாலியா அப்பகுதிக்கு வந்து சேரவில்லை. ஜாவேரி பள்ளத்தாக்கு பகுதிகளில் பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடப்பதுண்டு. போதைப் பொருள் கடத்துவது, கொலை மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு அது புகலிடமாக விளங்குகிறது. இதனால் அவர்களுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்துக்கு இருப்பதாக அஞ்சப்பட்டு வந்தது. தற்போது அவர்கள் இருவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து டாம் பிலிஃப்ஸ் மற்றும் அரோவ்ஜா பெராரியா ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரியோடி டி ஜெனிரோவில் ஒன்று கூடி நினைவு கூட்டம் நடத்தினர். அதில் பங்குகொண்ட டாம் பிலிஃப்ஸ் குடும்பத்தினர், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணம் வந்துவிட்டது. அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை பிரேசில் காவல்துறை முழுமையாக கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.