அமைச்சர் சகாக்களில் ஒருவர் பிரதமர் ஸ்காட் மோரீசனை கொடூரமான நபர், பைத்தியக்காரர் என்று தரக்கூறைவாக விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்பியதாக மூத்த அமைச்சரவைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முன்னாள் லிபரல் ஊழியர் பிரிட்டனி ஹிக்யின்ஸ் என்பவருக்கு துணை பிரதமர் பார்நாபி ஜாய்ஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோரீசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பிரதம மந்திரியும் ஒரு துணைப் பிரதமரும் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றிட வேண்டும். ஆனால் என்னை குறித்த துணை பிரதமர் ஜாய்ஸின் அவதானிப்பு தவறாக இருப்பது, அவர் மீதான பார்வையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம் அவருடைய சிந்தனை நாட்டின் நலன் மீது இல்லை என்பது தெரியவந்துள்ளதாக பிரதமர் மோரீசன் தெரிவித்தார்.
Link Source: https://ab.co/34fbcnP