Breaking News

மெல்போரினில் இரயில் மோதி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Police have intensified their investigation into the death of a child in a train crash in Melbourne.

மெல்போர்ன் புறநகர் பகுதியான Upwey யில் இரயில் மோதியதில் 3 மாத குழந்தை உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இரயில் விபத்தில் 3 மாத குழந்தையின் தாயாரும் காயமுற்று இருப்பதாகவும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Police have intensified their investigation into the death of a child in a train crash in Melbourneமருத்துவமனையில் உள்ள அந்த குழந்தையின் தாயாருக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் இரயிலில் அடிபட்டு , காயமுற்ற நிலையில் இருந்த 3 மாத குழந்தையையும், அக்குழந்தையின் தாயாரையும் மீட்டனர்.

உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3eeKE7Q