மேற்கு சிட்னி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மீரஜ் ஜாஃபர் (20) மற்றும் அரின்மா ஹயத் (19) ஆகிய காதலர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த திங்கள்கிழமை மீரஜ் ஜாஃபர் தனது காதலியை கொன்றுவிட்டதாகக் கூறி பேங்கஸ்டவுன் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
உடனடியாக காதலர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு காவலர்கள் விரைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது இளம்பெண் அரின்மா ஹயத், ரசாயனங்கள் கொட்டப்பட்ட குளியல் தொட்டியில் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பெண்ணின் காதலர் மீரஜ் ஜாஃபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெண்ணை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கொலையில் இருந்து விடுவிக்குமாறு மீரஜ் ஜாஃபர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3udICO6