ஆஸ்திரேலியாவின் ஈஸ்ட் பெர்த் நகரத்தில்,அதிகாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
இதை தொடர்ந்து உடனடியாக அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடிய போலிசார், சந்தேகிக்கும் படியான நபர்களை கண்காணிக்க தொடங்கினர்.
அப்போது கிரஹாம் பகுதியில் விபத்தில் சிக்கியது போன்ற இருந்த வாகனம் ஒன்றை சுற்றி வளைத்த போலசார் ,வாகனத்தில் இருந்த் ஒருவரை கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்தில் கிடைக்கும் தோட்டாக்கள் போன்ற பொருளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் .
மேலும் அந்த நபரை கைது செய்யும் போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் அது மர்ம நபர் பயன்படுத்திய துப்பாக்கியா அல்லது காவலர்கள் அந்த வாகனத்தை நோக்கி நடத்திய துப்பாக்கிச்சூடா என்பது தொடர்பான விவரம் முழுமையாக தெரியவில்லை .
வார விடுமுறை என்பதன் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் சந்தேக நபரை விரைவில் கைது செய்ய முடிந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று பொதுமக்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Link Source: https://ab.co/3ugdz1Y