Breaking News

வேலை பார்க்கும் இடத்தில் கைத் துப்பாக்கியை வைத்து பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 50 வயது ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெர்ரிமாவிலுள்ள ஊரகப் பகுதி டார்வின். இங்கு கடந்த வியாழக்கிழமை பெருரன் சாலையில் இரண்டு பேரிடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இருவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியை வைத்து மற்றொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

Police have arrested a 50-year-old man who threatened to kill a staff member with a handgun at his workplaceஇதுதொடர்பாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அவர்கள் 6 மணிக்கு வந்தனர். கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்த நபரை சுற்றி வைத்தனர். இதையடுத்து இரவு 9 மணியளவில் அந்த நபர் தானாகவே காவலர்களிடம் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துப்பறியும் இலாகாவைச் சேர்ந்த காவல் அதிகாரி ஆண்ட்ரூ கெர்ன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டார்வின் சம்பவத்தில் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட நபர் பயன்படுத்தி வந்த துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

டார்வின் உள்ளூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது. குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று அவர் கூறினார்.