Breaking News

இளைஞரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரை கத்தியால் குத்தி தப்பியோடிவிட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

லார்கஸ் நார்த் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் கிரே டெர்ரேஸ். கிராண்டு சந்திப்பு சாலையிலுள்ள ரோஸ் வாட்டர் பகுதியில் இளைஞர் இருந்துள்ளார். அவரை அணுகிய மர்ம நபர்கள் சிலர் இளைஞரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக இளைஞரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் அந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ராயல் அடிலேய்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Link Source: https://ab.co/3vqUVY4