Breaking News

பதினாறு வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தலைமறைவாகிவிட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Police are actively searching for the suspects in the case of the murder of a 16-year-old boy following their disappearance.

வெஸ்டர்ன் சிட்னியிலுள்ள ஆஸ்திரேலியாஸ் டிரைவ் என்கிற பகுதியைச் சேர்ந்த இளம்பெண், தன் வீட்டில் கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்துகொள்ள தன் நெருங்கிய தோழிக்கு அழைப்பு விடுதுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த விருந்துக்கு வந்த இளம்பெண்ணின் தோழி தன்னுடைய தோழி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களை அழைத்து வந்துள்ளார். அவர்களில் ஒருவர் விருந்து ஏற்பாடு செய்த இளம்பெண்ணின் காதலர் என்று தெரியவருகிறது.

Police are actively searching for the suspects in the case of the murder of a 16-year-old boy following their disappearanceவிருந்து தொடங்கியபோது தோழியுடன் வந்த மற்றொரு 16 வயது ஆண் நண்பர், விருந்து ஏற்பாடு செய்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் இளம்பெண்ணின் காதலர் கோபமடைந்ததை அடுத்து, இருவரும் சண்டையிட்டுள்ளார். அப்போது 16 வயது சிறுவனை, இளம்பெண்ணின் காதலர் கத்தியால் குத்தியுள்ளார். அதையடுத்து விருந்துக்கு அழைக்கப்பட்ட தோழி, அவருடைய தோழி, கத்தியால் குத்திய நபர் மூவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆஸ்திரேலியா டிரைவ் பகுதிக்கு விரைந்தனர்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்த குத்தப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். எனினும் சிகிச்சை பலனிக்காமல் அவன் உயிரிழந்தான். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வு தலைமை ஆய்வாளர் டிக்னர் வழக்குப் பதிவு செய்துள்ளார். தப்பிச் சென்ற மூன்று பேரையும் சந்தேகிக்கும் நபர்களாக வழக்குப் பதிவு செய்துள்ள நபர், அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்.