கடந்த டிசம்பர், 2020-ம் ஆண்டு மெல்பேர்னிலுள்ள பாயின்ட் கூக் பகுதியில் எரிந்த நிலையில் குழந்தை உட்பட மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். சம்பவம் நடந்த அடுத்தநாளில் மூன்று பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகக் கூறி ஜென்னி ஹேய்ஸ் என்கிற பெண்ணை காவல்துறையினர் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விக்டோரியா மாநில உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த புதன்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜென்னி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று நாள் முழுவதும் அவர் எதுவுமே பேசவில்லை. இதனால் இந்த வழக்கில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை இம்மாத கடைசிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளை உறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அன்று பாயின்ட் கூக் தீ சம்பவம் தொடர்பான வழக்கில் ஜென்னி குர்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.