2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பெண்ணுறுப்பு சிதைவு தொடர்பான வழக்கு ஆஸ்திரேலியாவில் பதிவான நிலையில், தற்போது பிறந்து இரண்டு வாரங்களே ஆன பெண் குழந்தைக்கு பெண்ணுறுப்பு சிதைவு செய்ய திட்டமிட்டிருந்த சம்பவம் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பிறந்த பெண் குழந்தைக்கு இதுபோன்ற சிகிச்சை செய்ய வேண்டும் என அவர்கள் மருத்துவர்களை அணுகியபோது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த காவலர்கள் 50 வயது மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக இரண்டு பெண்கள் மற்றும் குழந்தை பிறந்த மருத்துவமனை அங்குள்ள மருத்துவர்கள் உள்ளிட்டோரிடமும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் Armadale மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் தாங்கள் குழந்தையின் பெண்ணுறுப்பை சிதைக்க திட்டமிட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக நீதிபதி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறையினர் பதில் அளித்தனர். இந்நிலையில் செவ்வாய் அன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் மாவட்ட நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் உடன் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த இரண்டு பெண்களும் தங்கள் முகத்தை மறைத்தவாறு சென்றுவிட்டனர். ஊடகங்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் பதில் அளிக்கவும் மறமறுத்துவிட்டனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் இது போன்ற நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானவை என்று காவல்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஒரு சில நாடுகளில் சமூக சடங்குகளாக இவை அனுமதிக்கப்படுதாகவும், அதே நேரத்தில் மருத்துவரீதியாக எந்த வித முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாமல் ஆபத்தான முறையில் இதுபோன்ற பெண்ணுறுப்பு சிதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால திருமணச் சடங்குகள் உள்ளிட்டவற்றுக்காக இவ்வாறு செய்வது சமூக கலாச்சார சடங்குகளாக பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. குறிப்பாக நான்கு முதல் பத்து வயதில் பெண்ணுறுப்பு சிதைவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
Link Source: https://ab.co/35Lz13v