திங்கட்கிழமை முதல் திருமணங்கள், இறுதி சடங்கு ஆகிய எல்லாவற்றைக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
NSW ல் இன்னும் சில தளர்வுகள் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை 4 சதுர அடி சமூக இடைவெளி இருந்தது. ஆனால் இப்போது 2 சதுர அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் விளையாட்டு அரங்கம், வெளிப்புற திரையரங்குகளில் 100 சதவீதம் செயல்படலாம் என்று அறிவித்துள்ளனர். உணவகங்களில் தங்க வைத்திருக்கும் 6 நபர்களுக்கு நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகள் ஜிம் மற்றும் நைட் கிளப்புகளுக்கு கிடையாது . நடன மேடையில் 50 பேர் வரையில் இருக்கலாம் என்று அறிவித்தார். நிகழ்ச்சிகளில் குறைந்தது 5000 பேர் வரை கலந்து கொள்ளலாம். உட்புற அரங்கங்களில் குறைந்தது 75 சதவீதம் பேருடன் செயல்படலாம். 50 பேர் கொண்ட குழுவினர் உட்புற வளாகத்தில் பங்கு பெறலாம் என்று அறிவித்தார்.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும், உடம்பு சரியில்லாதவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், கைகளை சுத்தம் செய்யவது, முக கவசம் அணிவது போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்று Gladys Berejikilan அறிவித்தார்.
நாங்கள் தொடக்கத்தில் நோய் தொற்றுக்கு என்னவெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினோமோ அவையெல்லாம் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்தனர் இனியும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று Ms. Berejiklian அறிவுறுத்தினார்.லேசான அல்லது அறிகுறிகள் இல்லாத நோய் தொற்று உள்ள நபர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கிருஸ்துமஸ் கொண்டாட்ட விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இடையே நோய் தொற்று பரவ வாய்ப்புகள் இருக்கிறது . கட்டுப்பாடுகளை தளர்தியதால் சில்லறை விற்பனையாளர்கள் தங்களுக்கு இது ஒரு கடினமான ஆண்டாக இருக்காது என்றும் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று NSW தலைமை நிர்வாக அதிகாரி Nola Watson தெரிவித்துள்ளார்.