சீசன் ஒளிபரப்புக்கான உரிமத்தை 115 மில்லியன் டாலர் மதிப்பில் நீட்டித்துள்ள NRL நிறுவனம், 2027ம் ஆண்டு வரை வரும் அனைத்து சீசன்களிலும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை Nine Network நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. பெருந்தொற்று காரணமாக ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் காலதாமதம் ஆன நிலையில் தற்போது இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக NRL நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கான ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் இதுவரை 400 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளதாகவும் NRL நிறுவனம் தெரிவித்துள்ளது.
FOX Sports தனது விளையாட்டு சீசன் பல்வேறு விதமான ஊடகங்களில் ஒளிபரப்பாக 2023 முதல் 2027 வரை இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ரக்பி விளையாட்டுத் தொடரான ஆஸ்திரேலியா ரக்பி லீக் தொடரை ஒளிபரப்பும் உரிமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளதாக NRL நிறுவன தலைவர் Andrew Abdo தெரிவித்துள்ளார். Nine Network நிறுவனம் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொகையாக 115 மில்லியன் டாலரை ஒவ்வொரு சீசனுக்கும் வழங்க உள்ளது. மேலும், 15 மில்லியன் டாலர் கூடுதல் தொகையாக மற்ற போட்டிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் ஏற்பட்ட இடர்களை தாண்டி தற்போது போட்டிகள் தொடங்க உள்ளதாகவும், இதன் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளதால் இனி வரும் நாட்களில் வர்த்தக ரீதியாக நிறுவனங்கள் வளர்ச்சி பெறும் என்றும் நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடவர் பிரிவு முதல் சுற்று போட்டிகளில் இருந்து இறுதிச் சுற்று போட்டி வரை அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும், 26 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும் என்பதால் இந்த சீசன் களை கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் சீசன் பிரிக்கப்பட்டாலும், கடந்த ஆண்டுகளை காட்டிலும் கூடுதல் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளதால் அதற்கான வகையில் ஒளிபரப்பு உரிம ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்துள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் திருத்தங்கள் செய்யவும் தயராக உள்ளதாகவும் நெட்வொர்க் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Link Source: https://ab.co/3J60Tlm