நியூசிலாந்தில் இருந்து பிரிஸ்பேன் வரும் சர்வதேச பயணிகள் 11 பேரை முதற்கட்டமாக புதிய தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்க திட்டமிட்டிருப்பதாக கோவிட் தனிமைப்படுத்துதல் துறை ஆணையர் Joanne Greenfield கூறியுள்ளார்.
பிரிஸ்பேன் விமான நிலையத்திலிருந்து பேருந்து மூலமாக Toowoomba பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமிற்கு பயணிகள் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சர்வதேச பயணிகள் Wellcamp புதிய முகாமிற்கு மாற்றப்படுவார்கள் என்றும் துணை பிரீமியர் Steven Miles கூறியுள்ளார்.
இதனையடுத்து படிப்படியாக அங்கு பயணிகள் அனுமதிக்கும் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும், முதற்கட்டமாக 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் கூடுதலாக 100 படுக்கைகள் முகாமில் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் Steven Miles கூறியுள்ளார். சர்வதேச மாணவர்களுக்காகவும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வரும் சர்வதேச பயணிகளுக்கும் இது முன்னதாகவே திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் காலதாமதம் ஏற்பட்டு தற்போது திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்வினைகள் எழுந்து வந்த நிலையில் சர்ச்சைக்குரிய தனிமைப்படுத்துதல் முகாம் என்று இந்த திட்டம் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக 11 சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ள நிலையில் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் கூறப்படுகிறது.
Toowoomba Wellcamp திட்டம் முதலில் ஓர் ஆண்டு கால ஒப்பந்தமாக போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அது மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கட்டணம் செலுத்தும் வசதிகள் உள்ள நிலையில், வரி செலுத்துவோருக்கான சலுகைகள் குறித்த விவரங்களை குயின்ஸ்லாந்து அரசு இதுவரை வெளியிடாமல் உள்ளது.
Link Source: https://ab.co/3rxPxja