நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் சரக்கு கிடங்கில் கடந்த 17-ம் தேதி கொரோனா ரேபிட் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் சோதனை முடிவுகள் வைக்கப்பட்டு இருந்தன. இதற்குள் அனுமதியில்லாமல் நுழைந்த நபர்கள் சிலர், மொத்தம் 40 ஆயிரம் பேருடைய பரிசோதனை முடிவுகளை திருடினர்.
இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாநில காவல்துறை விரைந்து செயல்பட்டது. அதன்படி குற்றம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பெர்ரோடெட், இந்த திருட்டுச் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுவொரு அவமானச் செயல் என்று குறிப்பிட்டு தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மொத்தம் 32,297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக மாநிலம் முழுவதும் 40 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 27.8 சதவீத மக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதேபோல 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரில் 16.4 சதவீத பேர் முதல் தவணை தடுப்பூச்சி போட்டுக்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
Link Source: https://ab.co/3Ipym9p