ஆஸ்திரேலியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அந்நாட்டு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆஸ்திரேலிய மாநில அரசு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் கடந்த திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் இறுதியில் பல்வேறு முக்கிய முடிவுகளில் ஒத்த கருத்துகள் ஏற்பட்டதாகவும், தடுப்பூசி செலுத்துவது குறித்து புதிய கொள்கை முடிவுகள் வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தடுப்பூசி இரண்டாம் கட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த குயின்ஸ்லாந்து மாகாண முதலமைச்சர் அனஸ்டீசியா கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி முன்னுரிமை திட்டத்தின் அடிப்படையில்முக்கிய முடிவுகள் இந்த வார இறுதியில் தெரியவரும். முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய பணிகள் நடைபெற்றாலும் மாநிலங்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியை செலுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tasmania தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் படி முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கும் மத்திய திட்டத்திலிருந்து மத்திய திட்டத்திலிருந்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதலமைச்சர் Gladys பேசியபோது தடுப்பூசி வருகை அதிகரித்துக் கூடிய இடத்தில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது செலுத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தெரிவித்திருக்கும் கருத்துத் தெரிவித்திருக்கும் தெரிவித்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் தடுப்பூசி வருகையில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும் இது தொடர்பாக உற்பத்தியாளர்களிடமும், மாநிலங்கள், மருத்துவமனைகளிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து அவரிடம் கலந்து ஆலோசித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.