Breaking News

NEO-NAZI கருத்துகள் கொண்ட NSW இளைஞர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது !

சமூக வலைத்தளங்களில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களை பற்றி பகிர்ந்ததாலும் மற்றும் மிக அதிக உயிர் சேதம் உண்டாக்கும் தாக்குதலைப் பற்றிய கருத்துக்களை தெரிவித்ததாலும்,NSW Albury-ஐ சேர்ந்த neo-Nazi கொள்கைவாதி கைது செய்யப்பட்டார்.

Albury-ல் உள்ள தன் வீட்டில் கைது செய்யப்பட்ட இந்த 18 வயது இளைஞர் , neo-Nazi மற்றும் பிற right-wing பயங்கரவாத கொள்கைகளை கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது சில முக்கிய நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற குற்றம் சுமத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இந்த நபர் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார் என்றும், சமீபத்திய இவருடைய நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் AFP Assistant Commissioner Scott Lee புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல சமூக வலைத்தளங்களில் உள்ள அவருடைய தொடர்புகளின் மூலம் ,மிக அதிக அளவிலான உயிர் சேதத்தை உண்டாக்கும் நிகழ்வுகளில் இவருக்கு தொடர்பு மற்றும் ஆதரவும் இருப்பது தெரியவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாத செயல்கள் மற்றும் வன்முறைகளை தூண்டும் விதமாக, இவர் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களை பற்றிய தகவல்கள் அளித்துள்ளதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று Mr Lee தெரிவித்தார் .

கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, இந்த நபர் வெளிநாடுகளில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு தனது ஆதரவை தெரிவித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கடந்த மார்ச் 2019 நடந்த தாக்குதலுக்கு பின்புலமாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவைச் சார்ந்த பயங்கரவாதியின் கொள்கைகளை ஆதரித்தும் இவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் கீழ் உள்ளதால், இதில் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களை பற்றிய கருத்தை தெரிவிக்க Mr.Lee மறுத்துவிட்டார். கைது செய்யப்பட்ட இந்த நபர் ,தன் கருத்துக்கும் தன் உருவத்திற்கும் ஒத்துவராத அனைவருமே இவருக்கு எதிரானவர்கள் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் என்று NSW Police Assistant Commissioner Mark Walton தெரிவித்துள்ளார்.

right-wing பயங்கரவாதிகள் hero-worship உள்ளவர்களாக இருந்தார்கள் என்றும், வரலாற்றில் இது மறக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . சமுதாயத்தில் சிறந்த சாதனை செய்தவர்களையும், விளையாட்டு வீரர்களையும் இவர்கள் hero-worship பண்ணுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது பயங்கரவாதிகளுக்கு இடையே காணப்படும் எதிர்மறையான தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றாகும். கைது செய்யப்பட்ட அந்த நபர் Albury நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லும் முன், அவர் மீது குற்றச்சாட்டு பதியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.