Breaking News

மெல்பர்ன் : 4 காவலர்களை கொன்ற ட்ரக் ஓட்டுநர் பெண் ஒருவருடன் சென்று விபத்து ஏற்படுத்த இருந்த நிலையில் அவர்களை கைது செய்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தகவல்

Police have arrested a truck driver who killed four policemen and arrested them in connection with an accident.

Eastern Freeway நடைபெற்ற விபத்துக்கு முந்தைய தினம் நல்ல சூனியக்காரி என அழைத்துக் கொள்ளப்படும் பெண்ணுடன் சேர்ந்து ட்ரக் ஓட்டுநர் மொஹீந்தர் சிங் போதை மருந்து உட்கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐஸ் ஊசி போட்டுக்கொண்டு ட்ரக்கை ஓட்டிச்சென்ற நிலையில் மொஹீந்தர் சிங் கண்களை மூடிவிட்டதாக உடனிருந்த Glenys Nannup கூறியாதகவும் போலீசார் மெல்பர்ன் குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Eastern Freeway-ல் டிரக் ஓட்டி விபத்து ஏற்படுத்தி நான்கு போலீசாரை கொன்ற வழக்கில் மொஹீந்தர் சிங் கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரது முதலாளி மீது 82 வகையான புகார்களை குற்றப்பத்திரிகையாக காவல்துறை தாக்கல் செய்துள்ளது. விபத்துக்கு பிறகும் சிங் தொடர்ந்து வாகனம் ஓட்டி வந்தது தொடர்பான புகாரும் அதில் அடங்கும்.

Police have arrested a truck driver who killed four policemen and arrested them in connection with an accidentSimiona Tuteru தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதே நேரத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் Tuteru மீதான அனைத்து புகார்களும் போதிய ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டு்ள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும் விபத்துக்கு சாட்சியமாக Glenys Nannup -ஐ சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வாகனம் ஓட்டும் போது அயர்ந்து கண்களை மூடியதாகவும், அதுவே விபத்திற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சவுத்லேண்ட் பகுதியில் சிங் ஐஸ் வாங்கியதற்கான ஆதாரங்களும் அதில் சேர்க்கப்படுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விபத்தில் விக்டோரியா போலீசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக நான்கு காவலர்கள் விபத்தில் பலியாகினர். இந்த விபத்தை ஏற்படுத்தி மொஹீந்தர் சிங் வழக்கு தான் மெல்பர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Link Source: https://ab.co/3vhNwqO