பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வர நிர்வாகம் வேண்டுகோள்.
வார விடுமுறையை முன்னிட்டும் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 98,000 பேர் மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கவுள்ளனர்.
இதன் காரணமாக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 98,000 பயணிகள் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ள உள்ளனர்.இதன் காரணமாக பாதுகாப்பு சோதனையை விரைவாக மேற்கொள்ளவும், கடைசி நேர சிரமத்தை தவிர்க்கவும் பயணிகள் அனைவரும் முன்கூட்டியே விமான நிலையம் வர மெல்போர்ன் விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.