இரண்டு முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக காயத்தில் இருந்து மீண்டு வந்ததாகவும், தன்னுடைய உடல் நலம் குறித்து கவனிப்பது தனக்கு முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். காயம் குணமடைவதற்கு தன்னைத்தானே அவசரப்படுத்தி கொள்ள மாட்டேன் என்பதை உறுதி செய்வதாகவும் ரோஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.
ஒற்றையர் பிரிவில் 20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர், கடந்த 15 மாதங்களில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி வெற்றி பெற்றுள்ளார். மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஒரு வருடமாக ஓய்வில் இருந்த ரோஜர் பிரெஞ்சு உடனான போட்டியை வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவது தொடர்பாக கடினமான ஆபத்தை மேற்கொள்வதை விட ஓய்வு எடுப்பதே சிறந்த வழி என்றும், அப்போதே நான் தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவது இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் ரோஜர் கூறியுள்ளார். தான் இயல்பான நிலையில் இருப்பதாக உணரவில்லை என்றும் தற்போது இந்த போட்டியில் 50-வது செட்டை விளையாடிக் கொண்டிருக்கிற தான் நாளை தொடர்ந்து இந்த போட்டியில் பங்கேற்பேன் என்கிற நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே இது தனக்கான நேரம் அல்ல என்றும் ரோஜர் ஃபெடரர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட கடினமான சோதனைகளை எதிர்த்து தான் போராடிக் கொண்டிருப்பதாகவும், அவற்றைக் கடந்து தொடர்ந்து விளையாடுவதற்கான முயற்சிகளை தான் எடுப்பேன் என்றும் ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3w2Ldby