ஆஸ்திரேலியாவின் ACT -ல் உள்ள Weston skatepark-ல் கடந்த ஆண்டு இளைஞர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 6 இளைஞர்கள் குற்றவாளிகள் என ACT vu மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறார் உட்பட 9 பேருக்கு இடையே நடைபெற்ற மோதலில் மிகப் பெரும் சண்டையாக மாறியது ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் ஒரு இளைஞரை மார்பில் கத்தியால் ஆறு முறைக்கும் மேல் குத்தி உள்ளனர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அங்கிருந்த கார் ஒன்றையும் அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், பின் தொடர்ந்து வந்து தாக்குதல், கும்பல் தாக்குதல், சிறார் குற்றம் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்குவதற்கான விசாரணையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து 3 இவர்களைத் தவிர்த்து 6 இளைஞர்களும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அங்கிருந்து தப்பிச் சென்ற காரை ஓட்டி வந்த இளைஞரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் நீதிபதி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது கடும் மன வருத்தத்தை அழித்ததாக தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/2Wsu7az