கோலிவுட் கால்பந்து கிளப்பில் இனவெறி குறித்த ஒரு அறிக்கை, ஒரு விஷக் கலாச்சாரத்தை கொண்டுள்ளது, இது நாட்டின் வீரர்களுக்கும் மற்றும் ஆப்பிரிக்க வீரர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது.
2010இல் பிரிமியர்ஷிப் வீரர் heritier lumumba விளையாடும்போது இனவெறி தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டதாக கூறிய பின்னர், கோலிங்வுட் AFL club ஒரு மாதங்களுக்குள் முறையான இனவெறி என்பதற்கான ஆதாரங்களை ஒரு மோசமான அறிக்கை கண்டறிந்துள்ளது. மேலும் club-பில் இனவெறி கலாச்சாரம் முதல் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க வீரர்களுக்கு 35 பக்க அறிக்கையில் ஆழமான மற்றும் நிரந்தரமான தீங்கு விளைவித்ததாக கூறப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி Eddie McGuire பதவி விலகுவதாக அறிவித்தார்.அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இது கிளப்பில் உள்ள குழுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை திங்கள்கிழமையன்று பகிரங்கமாக வெளியிடப்பட்டது.
கோலிங்வுட் கால்பந்து கிளப் எதைக் குறிக்கிறது என்பதற்கும், அது என்ன செய்கிறது என்பதற்கும் இடையே ஒரு இடைவெளி உள்ளது. என்று அறிக்கை கூறுகிறது. கோலிங்வுட் ஆஸ்திரேலிய விளையாட்டுக் களத்தில் இருந்தும் மற்றும் களத்தின் வெளியே இருந்தும் இனவெறிக்கு பொருந்துவதாக மாறிவிட்டதாக எழுத்தாளர்கள் கண்டறிந்தனர். கோலிங்வுட்டின் பதில் பெரும்பாலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மாற்றத்தை செய்ய முயற்சி எடுப்பதை காட்டிலும் சேதங்களின் கட்டுப்பாடு மற்றும் brand-டை பாதுகாத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இனவாதத்தின் பிரச்சனைகளை கையாளப்படுவம் ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும் கடந்த கால தோல்விகளை ஒப்புக் கொள்வதும் கிளப்பின் தலைமையால் வரும் காலங்களில் சிறப்பாக செய்ய விரும்புவதும் அறிக்கையில் காணப்பட்டது. கிளப்புக்குள் நடக்கும் இனவெறி செயல்களுக்கு பொறுப்புக் கூறுவது மற்றும் அதன் விளைவுகளை உறுதிப்படுத்தவும், கடந்தகால இனவெறி செயல்களை சரிசெய்வதற்கு ஒரு திட்டத்தை கொண்டு வர கோலிங்வுட் வலியுறுத்தியது உட்பட 18 பரிந்துரைகளை இந்த அறிக்கை வெளியிட்டது. தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் வீரர் லுமும்பா ஆளான பிறகு கடந்த ஆண்டு கோலிங்வுட் வாரியத்தால் இது நியமிக்கப்பட்டது.
#EddiesGottaGoமற்றும் #Black Lives Matter போன்ற hashtag-குகள் ட்விட்டரில் ட்ரெண்டாக பரவியது , மேலும் லுமும்பா கிளப்பில் இனவெறியை அனுபவிப்பது பற்றி மிகவும் கடுமையாக பேசினார், அவருக்கு ‘சிம்ப்’என்ற புனைப் பெயரும் வழங்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உட்பட அவர் பகிரங்கமாக பேசினார். இன ரீதியான பாதிப்புகள் இல்லாத பாதுகாப்பான சூழலை கொடுக்க தவறியதற்காக அவர் தனது முன்னாள் கிளப் மற்றும் AFL மீது வழக்கு தொடுத்துள்ளார். ‘Do Better’அறிக்கையின் ஒரு பகுதியாக அவரது குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவில்லை.
திரு லுமும்பாவின் முழு ஈடுபாடு இல்லாமல் குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்வது பொருத்தமானதல்ல என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.