Breaking News

தமிழகத்தில் உறுதிசெய்யப்படும் கொரோனா தொற்றில் 50% சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்டறியப்படுவது தெரியவந்துள்ளது

It has been revealed that 50% of the confirmed corona infections in Tamil Nadu are found in Chennai and adjoining districts

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,711 கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதில் 50% தொற்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 9,40,145 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் தற்போது 46,308 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona tamil naduசென்னையில் மட்டும் 17,098 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில்ப் 4378 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4085 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 2105 கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 க்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

.நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.அதில் சென்னையில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 82,982 நபர்களுக்கு கொரோனா பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 2,06,03,108 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.