இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வீசத்தொடங்கியது முதலே பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1,26,287 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஸ்டிரா, குஜராஜ், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மட்டும் சுமார் 55% பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 685 ஆக பதிவாகியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பதிவாகும் அதிகபட்ச உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 9 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்புசி செலுத்தும் பணியை துருதப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.