தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12652 கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதில் 50% தொற்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன.
இதுவரை தமிழகத்தில் 10,37,711 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது 89,428 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,15,653 நபர்களுக்கு கொரோனா பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழந்தார் எண்ணிக்கை 13,317 ஆக அதிகரித்துள்ளது.