மெல்போர்னில் இருந்து தனது தாயுடன் வந்த 18 மாத ஆண் குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணம் செய்வதற்கு ஏதுவான சூழல் என்பது தொடர்பான ஆவணங்களையும், அனுமதியையும் அரசு வழங்கி வரும் நிலையில் அது தொடர்பான எந்த அனுமதியும் இல்லாமல் தாய் தனது குழந்தையுடன் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையை எடுத்து 18 மாத ஆண் குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து நேராக விடுதிக்கு அழைத்துச் சென்று குழந்தை தனிமைப் படுத்தப் பட்டது. முன்னதாக டாஸ் மாநில சுகாதாரத்துறை தாய் தந்தை இருவருக்கும் வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் குழந்தைக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இருவரும் ஹோபர்ட் சமூக சுகாதார கண்காணிப்பு மையத்திற்கு மாலை அனுப்பப்படுவார்கள் என்று தாஸ்மானியா பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். Julie Graham தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அச்சப்படும் அளவுக்கு வைரஸ் பாதிப்பின் தாக்கம் இல்லை என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஹோபர்ட் விமான நிலையம் தற்போது குறைந்த அளவிலான பாதிப்பு பரவல் மையமாகவே பட்டியலிடப்பட்டுள்ளது. தாயும் குழந்தையும் பயணம் செய்த அதே நேரத்தில் விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தாஸ்மானியா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Link Source: https://ab.co/2ZgSn0Y