கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஏஞ்சலா மெர்க்கல் அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த சான்செலரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 2005ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஞ்சலா மெர்க்கல் 16 ஆண்டு காலம் பதவியில் இருந்து வந்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்த நிலையில் ஏஞ்சலா மெர்கல் சான்செலராக தொடர்ந்தார்.
இத்தேர்தலில் சான்சலர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் Martin Scholz-ம் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். சமூக ஜனநாயக கட்சிக்கு சில இடங்களில் ஆதரவு குறைந்துள்ளதால், இந்த தேர்தலிலும் ஏஞ்சலா மெர்கெல் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையும் கூட்டணி கட்சிகளே ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏஞ்சலா மெர்கல்- ன் வெற்றிக்கு முக்கியமானவராக கருதப்படும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் Armin Laschetஅவரது சொந்த தொகுதியான Aachen-ல் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது மிகவும் முக்கியமான நாடாளுமன்றத் தேர்தல் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று கூறினார்.
அதே நேரத்தில் தனது வாக்கு சீட்டினை அவர் வாக்குப் பெட்டியில் செலுத்தும்போது வெளிப்படையாக தெரிந்ததாகவும், இதனால் அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. Armin Laschet தனது வாக்குச் சீட்டினை தவறாக மடித்த நிலையில் இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனடியாக எதுவும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
ஒருநாள் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை புதிதாக அமைய உள்ள அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான உறுதியான திட்டங்களை முன் வைப்பவர்களே ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனியின் வலிமையை பறைசாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஏஞ்சலா மெர்கலுக்கு எதிராக போட்டியிடும் சமூக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் Martin Scholz -ம் தனக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் நெருக்கமாக இருப்பதாக கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3EWv902