Breaking News

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆரஞ்ச் நகரத்தில் உள்ள ஆரஞ்ச் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் காப்பீடு, வங்கி சேவை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. கடந்த 31 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு வணிக வளாகத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

Lt. Amatதகவலறிந்து விரைந்த ஆரஞ்ச் நகர காவல்துறையினர் அங்கிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மர்ம நபரும் படுகாயம் அடைந்திருப்பதாக Lt. Amat தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி கைபற்றப்பட்டதாகவும் , துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Four people, including a child, have been killed in a mysterious shooting in the US state of Californiaபொதுமக்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த விவரங்களை வெளியிட காவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த மூன்று வாரத்தில் மூன்று இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவகள் நடைபெற்றுள்ளது. அட்லாண்டா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.