டவுன்ஸ்வில்லே பகுதியில் கடந்த 14-ம் தேதி நடந்த கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.
உலகக் கோப்பை போட்டி உட்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வெற்றிகளுக்கு இவர் காரணமாக இருந்தார். இந்நிலையில் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜான் புச்சனன்னன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனக்கும் சைமண்ட்ஸுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. கிரிக்கெட் போட்டியை மிகவும் நேசித்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் சில கொள்கைகளையும் அவர் கொண்டிருந்தார்.
வெறும் 46 வயதில் அவர் ஆகால மரணம் அடைந்திருப்பது மிகவும் வருந்துவதற்கு உரியது. இப்படிப்பட்ட ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள கொடூரமான இறப்பு என்னை கவலையடைச் செய்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ஜான் புச்சனன்னன் கூறியுள்ளார்.