வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ரோட்ரிகோ டூதர்தேவின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ஃப்லீபைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ஃபெர்டிநாட் மார்கோஸ் பதவியேற்கிறார். முன்னதாக ரோட்ரிகோ டூதர்தேவின் ஆட்சிக்காலத்தில் போதை தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
பல்வேறு போதை பயன்பாடு, பண்ட மாற்றம், வணிகம் உள்ளிட்ட காரணங்களால் 6000 பேர் வரை காவல்துறையினரால் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று ஃப்லீபைன்ஸ் அரசின் ஆவணங்கள் கூறுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகளுடன் தொடர்புடைய 3 லட்சம் பேர் வரை கைது செய்யப்பட்டு இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனித உரிமை ஆணையமோ இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. போதை தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக காவல்துறை எடுத்து நடவடிக்கையி 30 ஆயிரம் வரை கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர் என்று ஆணையம் கூறுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஃப்லீபைன்ஸ் நாட்டின் அதிபராக பதவியேற்ற ரோட்ரிகோ டூதர்தே போதை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக கவனம் செலுத்தினார். நாடு முழுவதும் போதை பயன்பாடு தொடர்பான செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்புகளையும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரணம் உள்ளிட்ட கொடூரமான தண்டனைகளும் வழங்கப்பட்டன்.
போதை குற்றவாளிகள் மட்டுமில்லாமல் எந்த தவறும் செய்யாத பொதுமக்கள் பலரும் தண்டனைக்கு ஆளாகுகின்றனர். இந்நிலையில் ஃப்லீபைன்ஸ் நாட்டில் மாறியுள்ள அரசாங்கம் இதுதொடர்பான நடவடிக்கைகளை விரிவுப்படுத்த வேண்டும் என அங்குள்ள அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. மேலும் போதை தடுப்பு நடவடிக்கைகள் முறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.