கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் இரண்டு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனிடையே அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன குறிப்பாக வங்கி நடவடிக்கைகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை அடுத்து மேற்குலக நாடுகளை போல ரஷ்யா மீது எந்தவிதமான பொருளாதார தடையும் விதிக்க போவதில்லை என்றும், வங்கி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை என்றும் சீனாவின் வங்கிகள் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் Guo Shuqing கூறியுள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை ரஷ்யா மற்றும் சீனா மிக அதிக அளவில் மேற்கொண்டுவரும் நிலையில், பொருளாதார தடை மற்றும் வர்த்தகம் தொடர்பான எந்தவித தடையையும் சீனா ரஷ்யாவிடம் மேற்கொள்ள போவதில்லை என்றும் Guo Shuqing திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதேநேரத்தில் மேற்குலக நாடுகள் ஒருதலைப்பட்சமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருவதாகவும் அது எந்த வகையிலும் தற்போதுள்ள சூழலை மேம்படுத்துவதற்கு உதவாது என்றும் சீன வங்கிகள் ஒழுங்கு முறை ஆணைய தலைவர் Guo Shuqing தெரிவித்துள்ளார். பெண் மீதான ரஷ்யாவின் தாக்குதல் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் உக்ரைன் தொடர்பான விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் Hua Chunying கூறியுள்ளார்.
உலகின் பெரும்பாலான நாடுகள் புதினின் ராணுவ நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன, இருப்பினும், சிரியா, ஈரான், பெலாரஸ் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள சீனா, இதைப் போர் என அழைக்கக் கூடாது என்றும் ராணுவ நடவடிக்கை என்றே குறிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளது.
சிக்கலான சூழலில் எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளையும் சீனா நிறுத்தப் போவதில்லை என்றும் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் என்றும் சீனா அறிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3MvyIhA