Breaking News

எரிந்த லாரியில் ஒருவர் சடலமாக மீட்பு..சாட்சியங்களை தேடும் போலீசார் !

The driver dead body recovered from burnt truck..Police searching for evidence

ஒரு டிரக் டிரைவரின் வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார், இந்த சம்பவம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் இந்த விபத்துக்கான ஆதாரங்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இந்தப் பெரிய தீ விபத்து சவுத் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்த போது, பிப்ரவரி 11 அதிகாலை 2.20 மணிக்கு மேற்கத்திய நெடுஞ்சாலையில் Serviceton என்ற இடத்தில் நடந்தது.

விசாரணையில் ஒரு பி-டபுள் டிரக் நின்று கொண்டிருந்த இன்னொரு டிரக்கின் பின்புறம் வேகமாக மோதியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் பின் நின்று கொண்டிருந்த ட்ரக் முன்னால் நின்ற லாரி மீது மோதியதால் அந்த மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக கூறுகின்றனர்.

The driver dead body recovered from burnt truckமுதல் டிரக்கின் டிரைவர், 46 வயதான parafield Gardens என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இரண்டாவது டிரக்கின் ஓட்டுனர், மேற்கு ஆஸ்திரேலியாவின் Langford-ஐ சேர்ந்த 27 வயது இளைஞரும், மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் Carey park -ஐ சேர்ந்த 63 வயதான அவரது பயணியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் விக்டோரியா போலீசார் தெரிவித்துள்ளனர் .

மூன்றாவது ட்ரக்கின் டிரைவர், மெல்போனின் மேற்கிலுள்ள Melton-ஐ சேர்ந்த 50 வயது நபர் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்த விபத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட அல்லது டிரக் மோதிய நேரத்தில் அந்த இடத்தில் இருந்த லாரி ஓட்டுனர்களிடம் Dashcam காட்சிகள் எதுவும் இருந்தால் 1800 333 000 என்ற எண்ணில் Crime Stoppers-ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது இரகசிய அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்கவும் போலீசார் கூறி வருகின்றனர்.