ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாகாணங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில் உள்நாட்டு பயண போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லைகள் திறக்கப்பட்டு விமான சேவைகள் மற்றும் சாலை போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் கோவிட் பரிசோதனை செய்வதற்கான பணத்தை பயணிகள் செலுத்தத் தேவையில்லை என்றும், இதனை காமன்வெல்த் மற்றும் அந்தந்த மாகாணங்களின் பகிர்ந்து கொள்ளும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கு ஒருவருக்கு 150 டாலர் வரை வசூலிக்கப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் RTPCR பரிசோதனையை பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொது சுகாதார விதிகளின் அடிப்படையில் காமன்வெல்த் மற்றும் அந்தந்த மாநிலங்களின் கூட்டு நடவடிக்கையின் கீழ் பரிசோதனைக்கான தொகையை பயணிகள் செலுத்த தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் Greg Hunt கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் இதன் மூலம் சிறப்பான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் குயின்ஸ்லாந்து பிரிமீயர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பரிசோதனைக்கு யார் பணம் செலுத்த வேண்டும் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாகாணங்களில் நடைமுறையில் உள்ள பணியிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு உள்ள 50 – 50 கட்டண நடைமுறை அப்படியே அமரில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3oW0nxc