சிட்னி மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் தென் மரூட்டா. நேற்று காலை அங்குள்ள உள்ளூர் பகுதியில் வானில் ஒரு ஹெலிகாப்டர் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றின் கரையோரமாக விழுந்தது.
நிலபரப்பில் இருந்து அடர்த்தியான புகை மேகங்கள் வெளிப்படுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அவசர ஊர்தி வாகனங்கள் மற்றும் மீட்புப் படை உள்ளிட்டவை சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரை செலுத்தி வந்த 60 வயது மதிக்கத்தக்க விமானி உயிரிழந்தார். அவருடைய அடையாளம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், உயிரிழந்தவருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.
ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம், இந்த விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.