மூன்று நாட்களுக்கு கிரேட்டர் பிரிஸ்பேனில் அதிகாரப்பூர்வமான Covid-19 ஊரடங்கு போடப்பட்டுள்ளது. Brisbane city, Ipswich, Logan, Redlands மற்றும் Moreton Bay போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Covid-19 பரவுவதை சமாளிக்க Sunshine மாநிலம் உடனடியாக குயின்ஸ்லாந்தில் இருந்து வரும் பயணிகளை கட்டாய தனிமைப்படுத்தப்படுதலுக்கு உத்தரவிட்டது. New South Wales, Western Australia மற்றும் Victoria ஆகிய மாநிலங்களும் குயின்ஸ்லாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மாலை 5 மணி முதல் கிரேட்டர் பிரிஸ்பேனில் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் இருந்து வரும் விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் மீது கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும் பல இடங்கள் மாநிலத்தின் வெளிப்பாடு தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
அடுத்த மூன்று நாட்களில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களில், பதிவேடுகள் மற்றும் நீதிமன்றங்கள் பொதுமக்கள் வருகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வளாகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . விசாரணைகள் ஒத்தி வைக்கப்படும்.
மாநில அறிக்கையில் நியூசிலாந்து ஹெல்த் கூறுகையில் Coal coast, Sunshine Coast மற்றும் Toowoomba-ல் எந்தவொரு Covid-19 சமூக பரவல்கள் பற்றி தெரியாது என்று கூறியுள்ளது. நிச்சயமாக இது குறித்து கூடுதல் தகவல்களை பற்றி தெரிந்தால் அதை நாங்கள் உங்களிடம் தெரிவிப்போம் என்றும், ஆனால் இது குறித்து எங்களுக்கு இன்னும் முறையான தகவல்கள் கிடைக்கவில்லை என கூறியுள்ளது .