அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் குறைந்த மூலப்பொருள் செறிவு கொண்ட கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கு ஆஸ்திரேலியாவின் சிகிச்சைக்குரிய பொருட்களை தரவாய்வு செய்யும் டி.ஜி.ஏ என்கிற அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இம்மருந்துக்கு நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
தற்போது ஆஸ்திரேலிய அரசு குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறது. விரைவில் மாடர்னா தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடுவது தொடர்பாக ஆலோசனைக்குழு உரிய முடிவு எடுக்கும் என்று தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர், மார்டனா குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு டி.ஜி.ஏ அனுமத் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்கு முன்னதாக, சில நகர்வுகள் உள்ளன. அதை தொடர்ந்து தான் மார்டனா குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.