விக்டோரியாவில் தொற்றுப் பரவல் அதிகரிக்க தொடங்கியதிலிருந்து ஒரு நாளின் உச்சபட்ச எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. 473 பேரில் பெரும்பாலான நபர்களுக்கு கட்டுமானத் துறையினர் மூலமாகவே தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அத் துறை சார்ந்தவர்களும் வைரஸ் பாதிப்புக்கு அதிக அளவில் ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 157 மருத்துவமனைகளில் உள்ள நிலையில், 38 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 26 பேருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனை அடுத்து கட்டுமான துறை சார்ந்தவர்களுக்கு அடுத்த நான்கு வாரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட எச்சரிக்கைகளை விக்டோரிய மாகாண கருவூலக் காப்பாளர்
Tim Pallas வெளியிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி போடுவதில கட்டுமானத் துறை தொழிலாளர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அத்துறை மூலமாக தொற்று பரவுவதை முழுவதும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த வாரத்தில் 20 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் கட்டுமானத்துறை தொழிலாளர்களுக்கு செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும், அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு இலக்கு எதுவும் இல்லாததால் அனைவரும் செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் Tim Pallas தெரிவித்துள்ளார்.
விக்டோரியா, மெல்போர்ன் மேற்கு ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு கட்டுமான தொழிலாளர்கள் சென்று வருவதும், அவர்கள் வேலை நடைபெறும் தளங்கள் மற்றும் வீடுகளுக்கும் சென்று வருவதால் தொற்றுப் பரவல் அபாயம் அதிகரித்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. 20 கிலோமீட்டர் பரப்பளவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அதிலிருந்து 4 கிமீ பரப்பளவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றும் ஊழியருக்கு தொற்று உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறை ஊழியர்கள் கட்டுப்பாடுகளை மதித்து நடக்காவிட்டால் பணிகள் நடைபெறாத வண்ணம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் விக்டோரியா அரசு எச்சரித்துள்ளது. மேலும் தடுப்பூசி நடவடிக்கைகளில் வழங்கப்படும் முன்னுரிமைகளை பயன்படுத்தி உரிய முறையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கட்டுமான தளங்களில் கொரனோ விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விதி மீறப்படும் கட்டுமான தளங்கள் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3Cd0OYH