Breaking News

இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கங்கை நதிக்கரையில் கும்பமேளாவை ஒட்டி ஆயிரக்கணகான மக்கள் ஒன்று திரள்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் இதுவரை பின்பற்றப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.இனி ஆஸ்திரேலியவை சேர்ந்த உள்நாட்டு பயணிகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விக்டோரியா மாநிலத்திற்கு வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த சமூக தொற்றும் கண்டறியப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி செலுத்தும் சேவையை அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுத்தி உள்ளது .

அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதில் இருக்கக்கூடிய குழப்பநிலை காரணமாக பலர் தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.